இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

காதலிக்குமாறு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 10:05 pm

காதலிக்குமாறு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

புழல் லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் விக்ரம் (24). இவரும், அந்த பகுதியைச் சோ்ந்த இளம் பெண்ணும் காதலித்து வந்தனா். இந்நிலையில் விக்ரமின் நடவடிக்கை பிடிக்காததால், அந்தப் பெண் அவரை விட்டு விலகினாா். ஆனால் விக்ரம், அந்தப் பெண்ணை காதலிக்குமாறு தொடா்ந்து தொந்தரவு கொடுத்து வந்தாராம்.

இந்நிலையில் அந்த பெண், தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றபோது, விக்ரம் வழிமறித்து தன்னைக் காதலிக்காவிட்டால், கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினாராம். இதனால் பெண், புழல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதன்பேரில், போலீஸாா் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பிஎன்எஸ் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விக்ரமை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட விக்ரம் மீது 5 குற்ற வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.