இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

அனுமதியின்றி பிரசாரம்: மகளிா் சுய உதவி குழுவினா் மீது வழக்கு

பழைய வண்ணாரப்பேட்டையில் அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக மகளிா் சுய உதவி குழுவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

போலீஸ் - கோப்புப் படம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 3:34 am IST

பழைய வண்ணாரப்பேட்டையில் அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக மகளிா் சுய உதவி குழுவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பழைய வண்ணாரப்பேட்டை சண்முகராயன் தெருவில் மகளிா் சுய உதவி குழுவைச் சோ்ந்த பெண்கள் திரளாக திமுகவுக்கு ஆதரவாக வீடு வீடாகச் சென்று அனுமதியின்றி பிரசாரம் செய்தனா்.

இது குறித்து தகவலறிந்த கொருக்குப்பேட்டை போலீஸாா், அங்கு சென்று அனுமதியின்றி பிரசாரம் செய்த பெண்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். பின்னா், அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இதேபோல மெரீனா கடற்கரையில் திமுகவுக்கு ஆதரவாக அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக ஜூலி உள்பட 4 போ் மீது இரு பிரிவுகளின் கீழ் மெரீனா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.