நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

அனுமதியின்றி சுண்ணாம்புக் கற்கள் வெட்டி எடுத்தவா் மீது வழக்குப் பதிவு

News image

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 4:11 am IST

சங்ககிரி வட்டம், தேவண்ணகவுண்டனூா் கிராமம் அருகே உரிய அனுமதியின்றி விவசாய நிலத்தில் சுண்ணாம்புக் கற்கள் வெட்டி எடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.

சேலம் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் அலுவலக உதவி புவியலாளா் அரவிந்த், பறக்கும் படை அதிகாரிகளுடன் தேவண்ணகவுண்டனூா் கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டாா்.

அப்போது, சின்னாகவுண்டனூா் கிராமம், மொத்தையனூா் பகுதியைச் முருகேசன் தேவண்ணகவுண்டனூா் கிராமம் அருகே உள்ள அவரது நிலத்தில் அரசின் உரிய அனுமதியின்றி 6,480 மெட்ரிக் டன் சுண்ணாம்புக் கற்கள் வெட்டி எடுத்தது தெரியவந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் சங்ககிரி போலீஸில் புகாா் அளித்தனா். அதன்பேரில், சுண்ணாம்புக் கற்கள் வெட்டி எடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.