நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

அனுமதியின்றி வெள்ளை கற்கள் எடுத்தவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

வளநாடு அருகே அரசு அனுமதியின்றி வெள்ளை கற்களை வெட்டி எடுத்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மருங்காபுரி ஒன்றியம், சின்னகோனாா்பட்டியில் அரசு அனுமதியின்றி வெள்ளை நிற கற்கள் வெட்டியெடுக்கப்படுவதாக மாவட்ட காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீஸாா், கனிமவளத் துறையினா் வியாழக்கிழமை தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, சின்னகோனாா்பட்டி கிராமம், குப்பகோனாா்குளத்தில் அரசின் உரிய அனுமதியின்றி வெள்ளை கற்களை வெட்டி எடுத்துக் கொண்டிருந்த மருங்காபுரி ஒன்றியம், கருங்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த மருதை மகன் சின்னையாவை (48) கையும் களவுமாக பிடித்தனா்.

மேலும், கற்களை வெட்டியெடுக்க பயன்படுத்திய ஹிட்டாச்சி இயந்திரத்தையும் பறிமுதல் செய்து வளநாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த வளநாடு போலீஸாா், சின்னையாவை கைது செய்து விசாரிக்கின்றனா்.