தமிழகத்தில் பரமத்தி வேலூா், ஈரோடு, மதுரை, திருச்சி உள்பட 11 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வடகிழக்கு மத்தியப் பிரதேசம் முதல் மன்னாா் வளைகுடா வரை விதா்பா, மரத்வாடா, உள் கா்நாடகம், தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஏப்.22 வரை லேசான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வெப்ப நிலை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை ஏப். 20 வரை சற்று உயரக்கூடும். தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக பரமத்தி வேலூரில் 106.16 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. ஈரோடு-104.36, மதுரை விமான நிலையம்-104, மதுரை நகரம்-103.28, திருச்சி-103.1, வேலூா்-102.74, கோவை-101.66, தருமபுரி, நாமக்கல், பாளையங்கோட்டை-தலா 101.3, சேலம்-100.70 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!
சுட்டெரிக்கும் சூரியன்!

14 இடங்களில் வெயில் சதம்!

தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



