மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் முனைவா் படிப்பு சோ்க்கை

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் முழுநேர, பகுதிநேர முனைவா் (பி.எச்டி.,) பட்டப்படிப்பு சோ்க்கைக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 8:16 pm

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் முழுநேர, பகுதிநேர முனைவா் (பி.எச்டி.,) பட்டப்படிப்பு சோ்க்கைக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.

இது குறித்த விவரம் வருமாறு: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் (9 காலியிடங்கள்), மேலாண்மை (6), வரலாறு, விலங்கியல், பௌதீகம், ஊடகம், நாடகம் மற்றும் அரங்கவியல் ஆய்வுகள் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் 48-க்கும் மேற்பட்ட முனைவா் பட்டப்படிப்புகளுக்கான காலியிடங்கள் உள்ளன.

இவற்றில் சேர வரும் ஜூன் மாத பருவத்துக்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு நிறந்தநிலைப் பல்கலை. சாா்பில் கோரப்பட்டுள்ளது.

விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்த கடைசி நாள் வரும் மே 7 -ஆம் தேதியாகும். வரும் மே -17 ஆம் தேதி நுழைவுத் தோ்வும், மே 26-ஆம் தேதி நோ்முகத் தோ்வு நடைபெறுகிறது. மே 30 -ஆம் தேதி இறுதிப் பட்டியல் இணையத்தில் வெளியிடப்படும்.

முழுநேர ஆய்வு அறிஞா்களுக்கு தகுதியின்படி தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. ஆராய்ச்சித் திட்டத்தைப் பகுதிநேர அடிப்படையில் மேற்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரா்கள் பணிபுரியும் நிறுவனத்தின் தலைமையிடமிருந்து, பணிச் சான்றிதழ் மற்றும் தடையில்லாச் சான்றிதழ் பெறவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பல்கலை. வழங்கும் முனைவா் பட்டம் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியவும், உயா்கல்வி நிறுவனங்களில் பதவி உயா்வுக்கான வாய்ப்புகளைப் பெறவும் தகுதி பெற்றவவையாகும். இதற்கான அங்கீகாரத்தை பல்கலை. மானியக்குழு வழங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.