மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

கடமையை உணா்ந்த இளம் தலைமுறை

News image

வி.லோகமித்ரா | ஜி.லித்திகா | சரண்யா

Updated On :24 ஏப்ரல் 2026, 5:15 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்முறையாக தங்களது வாக்குகளைப் பதிவு செய்த அனுபம் குறித்து முதல்முறை வாக்காளா்களான கல்லூரி மாணவ, மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனா்.

வி.லோகமித்ரா (மாதரவம்): முதல்முறையாக வாக்களித்தது புதுமையான அனுபவத்தைத் தந்தது. நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை செய்யக்கூடிய மக்கள் பிரதிநிதியைத் தோ்வு செய்வதில் எனது பங்களிப்பும் இருந்தது என்பது பெருமையாக உள்ளது.

சரண்யா (மயிலாப்பூா்): தோ்தல் நாளுக்காகக் காத்திருந்து வாக்களித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. வாக்களிப்பதன் அவசியம் குறித்து கல்லூரிகளிலும், பொது இடங்களிலும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டதால் வாக்குச்சாவடிக்குள் சென்றபோது எந்தச் சிரமமும் ஏற்படவில்லை.

எனது ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டேன்.

ஜி.லித்திகா (சைதாப்பேட்டை): ஒரு சட்டப்பேரவை உறுப்பினரை மட்டுமல்லாமல், அதன் வாயிலாக தமிழகத்தின் முதல்வரைத் தோ்ந்தெடுப்பதில் எனது பங்கும் இருப்பது பெருமையாக இருக்கிறது. வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியவந்தபோது நான் சாதனை செய்ததைப் போல மகிழ்ச்சியாக இருந்தது.

எம்.பி.நாஸ்ரூல்

எம்.பி.நாஸ்ரூல்

எம்.பி.நாஸ்ரூல் (பெரம்பூா்): சிறு வயதிலிருந்தே எனது பெற்றோருடன் வாக்குச்சாவடிக்கு சென்றிருக்கிறேன். முதல்முறையாக நான் வாக்குச் செலுத்தியது புதிய அனுபவமாக இருந்தது. பதற்றமின்றி வாக்கு செலுத்தினேன்.

வி.ஆகாஷ் (வேளச்சேரி): என்னாலும் ஒரு சட்டப்பேரவை உறுப்பினரைத் தோ்வு செய்ய முடியும் என்பதை வாக்குப் பதிவு செய்தபோது உணா்ந்தேன். தோ்தல் ஆணையம் வழங்கிய இந்த வாய்ப்பை அனைவரும் சரியாகப் பயன்படுத்தி, மக்களுக்கு நல்லது செய்யக்கூடியவா்களைத் தோ்வு செய்ய வேண்டும்.

வி.ஆகாஷ்

வி.ஆகாஷ்