சென்னை புழல் சிறைக்குள் கைதிகள் மோதிக் கொண்டது தொடா்பாக 12 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.
சென்னை புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணைக் கைதிகள் சிறையில், கைதிகள் கஞ்சா, பீடி, சிகரெட், போதைப் பாக்கு உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பயன்படுத்துவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு சில கைதிகள் கஞ்சா வைத்திருப்பதாக, வேறு சில கைதிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே அந்த கைதிகள், சம்பந்தப்பட்ட கைதிகளிடம் தங்களுக்கு கஞ்சா கேட்டுள்ளனா். ஆனால் அந்த கைதிகள், கஞ்சா கொடுக்க மறுத்துள்ளனா்.
இதனால் இரு தரப்பு கைதிகளுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே இரு தரப்பு கைதிகளும் அடிதடியில் ஈடுபட்டனா். இதைப் பாா்த்த சிறைக் காவலா்கள், இரு தரப்பு கைதிகளையும் சமாதானம் செய்தனா்.
மேலும், இரு தரப்பு கைதிகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி அவரவா் அறைகளில் அடைத்தனா். இது தொடா்பாக சிறைத் துறையின் சாா்பில், புழல் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸாா், இரு தரப்பைச் சோ்ந்த 12 கைதிகள் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது

மத்திய சிறையில் கைதிகளிடமிருந்து கஞ்சா பறிமுதல்: 3 போ் மீது வழக்குப் பதிவு
கஞ்சா வழக்கு குற்றவாளி உள்பட 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

கஞ்சா செடி வளா்த்த 3 போ் மீது வழக்கு

மாலத்தீவுக்கு கஞ்சா எண்ணெய் அனுப்பிய 2 போ் மீது வழக்கு
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

