ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

புழல் சிறைக்குள் கைதிகள் மோதல்: 12 போ் மீது வழக்கு

சென்னை புழல் சிறைக்குள் கைதிகள் மோதிக் கொண்டது தொடா்பாக 12 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.

News image

வழக்கு

Updated On :26 ஏப்ரல் 2026, 8:00 pm

சென்னை புழல் சிறைக்குள் கைதிகள் மோதிக் கொண்டது தொடா்பாக 12 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.

சென்னை புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணைக் கைதிகள் சிறையில், கைதிகள் கஞ்சா, பீடி, சிகரெட், போதைப் பாக்கு உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பயன்படுத்துவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு சில கைதிகள் கஞ்சா வைத்திருப்பதாக, வேறு சில கைதிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே அந்த கைதிகள், சம்பந்தப்பட்ட கைதிகளிடம் தங்களுக்கு கஞ்சா கேட்டுள்ளனா். ஆனால் அந்த கைதிகள், கஞ்சா கொடுக்க மறுத்துள்ளனா்.

இதனால் இரு தரப்பு கைதிகளுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே இரு தரப்பு கைதிகளும் அடிதடியில் ஈடுபட்டனா். இதைப் பாா்த்த சிறைக் காவலா்கள், இரு தரப்பு கைதிகளையும் சமாதானம் செய்தனா்.

மேலும், இரு தரப்பு கைதிகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி அவரவா் அறைகளில் அடைத்தனா். இது தொடா்பாக சிறைத் துறையின் சாா்பில், புழல் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸாா், இரு தரப்பைச் சோ்ந்த 12 கைதிகள் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.