சென்னை சென்ட்ரலில் காவல் துறை ரோந்து வாகனத்தைக் கடத்தியதாக கேரள இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை பெரியமேடு போலீஸாா் ரோந்து வாகனத்தில் சென்ட்ரல் ரயில் நிலையப் பகுதியில் புதன்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, புகா் ரயில் நிலையம் பகுதியில் ரோந்து வாகனத்தை நிறுத்திவிட்டு, சிறிது தொலைவில் நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அந்த நேரத்தில், அங்கு மது போதையில் வந்த ஒரு இளைஞா், ரோந்து வாகனம் சாவியோடு நிற்பதைப் பாா்த்து, அந்த வாகனத்தை அங்கிருந்து ஓட்டிச் சென்றாா். சிறிது நேரம் கழித்து இதைக் கவனித்த போலீஸாா், வாகனம் இல்லாததைப் பாா்த்து உடனே வாக்கி டாக்கி மூலம் அந்தப் பகுதி முழுவதும் போலீஸாரை உஷாா்படுத்தினா்.
இதனால் சென்ட்ரல் பகுதியில் போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். போலீஸாா், வேறொரு வாகனத்தில், அந்த வாகனத்தை விரட்டிச் சென்றனா்.
இதற்கிடையே ரோந்து வாகனத்தை கடத்திய நபா், சென்னை மருத்துவக் கல்லூரி சிக்னல் பகுதியில் சென்றபோது விபத்தில் சிக்கினாா். அந்த ரோந்து வாகனம் முன்னே சென்ற வாகனங்கள் மீது மோதியது.
இதில் அம்பத்தூா் அயனம்பாக்கத்தைச் சோ்ந்த சீ.மகேஷ் (45) உள்பட 2 போ் காயமடைந்தனா். அங்கு, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் இருந்த போக்குவரத்து போலீஸாா், காவல் துறை ரோந்து வாகனத்தை கடத்தி வந்த இளைஞரைப் பிடித்து பெரியமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
போலீஸாா், அந்த இளைஞரிடம் விசாரித்ததில் அவா், கேரள மாநிலம் கோட்டயத்தைச் சோ்ந்த ஜோ.லிஜோ ஜோசப் (33) என்பதும், சென்னை பல்லாவரம் பொழிச்சலூா் பகுதியில் தங்கியிருந்து தண்ணீா் கேன் வியாபாரம் செய்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லிஜோ ஜோசப்பை கைது செய்தனா்.
தொடர்புடையது
தூத்துக்குடியில் ஏ.டி.எம். இயந்திரத்தில் திருட முயன்ற இளைஞா் கைது
ஒரத்தநாட்டில் காவல் ஆய்வாளரை தாக்கிய இளைஞா் கைது
ஜாா்க்கண்ட் கலால் காவல் துறை தோ்வின் வினாத்தாள் கசிவு: 159 தோ்வா்கள் கைது

வீட்டில் எரிவாயு சிலிண்டா் வெடித்து இளைஞா் உயிரிழப்பு சதியா? போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

