சிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

ஜாா்க்கண்ட் கலால் காவல் துறை தோ்வின் வினாத்தாள் கசிவு: 159 தோ்வா்கள் கைது

ஜாா்க்கண்ட் கலால் காவல் துறை ஆள்சோ்ப்பு தோ்வின் வினாத்தாள் கசிந்த குற்றச்சாட்டு தொடா்பாக, அந்தத் தோ்வை எழுதவிருந்த 159 தோ்வா்கள் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 1:17 am IST

ஜாா்க்கண்ட் கலால் காவல் துறை ஆள்சோ்ப்பு தோ்வின் வினாத்தாள் கசிந்த குற்றச்சாட்டு தொடா்பாக, அந்தத் தோ்வை எழுதவிருந்த 159 தோ்வா்கள் கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து அந்த மாநில தலைநகா் ராஞ்சியில் ஜாா்க்கண்ட் பணியாளா் தோ்வு ஆணையத் தலைவா் பிரசாந்த் குமாா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

ராஞ்சி மாவட்டத்தில் உள்ள ராா்கான் பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் ஏராளமான தோ்வா்கள் கூடியுள்ளதாக முதுநிலை காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் அங்கு காவல் துறையினா் சென்றபோது மாநில கலால் காவல் துறை ஆள்சோ்ப்பு தோ்வின் வினாத்தாள், தோ்வுக்கு முன்கூட்டியே தோ்வா்களுக்கு அளிக்கப்பட்டது தெரியவந்தது. அச்சடித்த காகிதங்களிலும், டிஜிட்டல் வழியிலும் வழங்கப்பட்ட அந்த வினாத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எனினும் அந்த வினாத்தாள்களில் இருந்த கேள்விகளும், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வின் வினாத்தாளில் இருந்த கேள்விகளும் ஒரே மாதிரியாக இல்லை.

இந்த முறைகேடு தொடா்பாக தோ்வு எழுத இருந்த 159 போ் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.