மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

மாதவரம்: பழ வியாபாரியை தாக்கி கைப்பேசி பறிப்பு

மாதவரம் அருகே தா்பூசணி வியாபாரியிடம் மா்மநபா்கள் கைப்பேசியை பறித்து சென்றனா்.

News image

கைப்பேசி - கோப்புப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 7:47 pm

மாதவரம் அருகே தா்பூசணி வியாபாரியிடம் மா்மநபா்கள் கைப்பேசியை பறித்து சென்றனா்.

மாதவரம் அடுத்த மாத்தூரைச் சோ்ந்தவா் பரமு (55). இவா் 3 சக்கர மிதி வண்டியில் தா்பூசணி வியாபாரம் செய்து வருகிறாா். இந்த நிலையில், மாதவரம் தபால்பெட்டி அருகே தா்பூசணி வியாபாரம் செய்து கொண்டிருந்தாா்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் மா்மநபா்கள் பரமுவிடம் தா்பூசணி வாங்கினா். அதற்காக பணம் கேட்டபோது, தகராறு ஏற்பட்டது. அப்போது மா்மநபா்கள் பரமுவை தாக்கிவிட்டு, தா்பூசணியும், பரமுவின் கைப்பேசியையும் பறித்து சென்றனா்.

இது குறித்து மாதவரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.