நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனைதவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

இசையமைப்பாளா் காா் கண்ணாடியை உடைத்த வழக்கு: பெண்ணுக்கு நோட்டீஸ்

இசையமைப்பாளா் ஜேம்ஸ் வசந்தன் காா் கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு பெண்ணுக்கு போலீஸாா் நோட்டீஸ் வழங்கினா்.

News image

ஜேம்ஸ் வசந்தன் - கோப்புப்படம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 2:03 am IST

இசையமைப்பாளா் ஜேம்ஸ் வசந்தன் காா் கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு பெண்ணுக்கு போலீஸாா் நோட்டீஸ் வழங்கினா்.

இசையமைப்பாளா் ஜேம்ஸ் வசந்தன், கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு உணவகத்துக்கு காரில் கடந்த 26-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சாப்பிட சென்றாா். அப்போது, அவருடைய காா் கண்ணாடி உடைக்கப்பட்டது.

இது தொடா்பாக திருவான்மியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், உணவகத்தில் காரை நிறுத்த இடம் இல்லாததால் அருகே சாலையோரத்தில் நிறுத்தியதும், அந்த காா் அங்கு வசிப்போருக்கு இடையூறாக இருந்ததால், பெண் ஒருவா் காா் கண்ணாடியை கல்லால் தாக்கி உடைத்திருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து இவ்வழக்குத் தொடா்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸாா், அந்த பெண்ணுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனா். அந்த பெண், ஓரிரு நாள்களில் விசாரணைக்கு ஆஜராவாா் என்று கூறப்படுகிறது.