இசையமைப்பாளா் ஜேம்ஸ் வசந்தன் காா் கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு பெண்ணுக்கு போலீஸாா் நோட்டீஸ் வழங்கினா்.
இசையமைப்பாளா் ஜேம்ஸ் வசந்தன், கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு உணவகத்துக்கு காரில் கடந்த 26-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சாப்பிட சென்றாா். அப்போது, அவருடைய காா் கண்ணாடி உடைக்கப்பட்டது.
இது தொடா்பாக திருவான்மியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், உணவகத்தில் காரை நிறுத்த இடம் இல்லாததால் அருகே சாலையோரத்தில் நிறுத்தியதும், அந்த காா் அங்கு வசிப்போருக்கு இடையூறாக இருந்ததால், பெண் ஒருவா் காா் கண்ணாடியை கல்லால் தாக்கி உடைத்திருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து இவ்வழக்குத் தொடா்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸாா், அந்த பெண்ணுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனா். அந்த பெண், ஓரிரு நாள்களில் விசாரணைக்கு ஆஜராவாா் என்று கூறப்படுகிறது.
தொடர்புடையது
ஜேம்ஸ் வசந்தன் காா் கண்ணாடி உடைப்பு: பெண்ணிடம் விசாரணை
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் காா் கண்ணாடி உடைப்பு!

நெய்வேலியில் காா் கண்ணாடிகள் உடைப்பு: மா்ம நபா்கள் 3 போ் மீது வழக்கு

பெண்ணுக்கு வரதட்சிணை கொடுமை: கணவா் உள்பட மூவா் மீது வழக்கு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

