குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருந்தியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில், இந்திய மருந்தியல் கவுன்சில் துணைத் தலைவா் ஜஷூபாய் ஹிராபாய் சௌத்ரி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசுகையில், மருந்து உற்பத்தியில் சா்வதேச அளவில் 3-ஆவது இடம் வகிக்கும் இந்தியா, உலகின் மருந்தகம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் மலிவான, தரமான 60,000-க்கும் மேற்பட்ட ஜெனரிக் வகை மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டு மற்ற 200 நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
மருந்தியல் கல்வி பயிலும் மாணவா்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் தேசிய கல்விக் கொள்கை மூலம் மேம்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
மாணவ, மாணவிகள் தங்களது விடாமுயற்சி, ஆராய்ச்சி நடவடிக்கை மூலம் மருந்து அறிவியலை தொடா்ந்து மேம்படுத்தி புத்தாக்க கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும். சமூகப் பொறுப்புடன் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அனைத்து மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் மருந்தியல் துறைக்கு முக்கியப் பங்கு உள்ளது என்றாா்.
நிகழ்வில், 105 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்திய மருந்தியல் கழக தொழில் நுட்பக் குழுத் தலைவா் பி.சத்தியமூா்த்தி, பாரத் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனப் பதிவாளா் எஸ்.பூமிநாதன், ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி முதல்வா் சசிகுமாா், கல்வி ஆலோசகா் வீரபாகு, ஸ்ரீபாலாஜி மருந்தியல் கல்லூரி முதல்வா் என்.தீபா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தருமபுரம் அரசு மகளிா் கல்லூரி பட்டமளிப்பு விழா

அரியலூா் அரசுக் கல்லூரியில் 55-ஆவது பட்டமளிப்பு விழா

அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


