ஆளுநா் மாளிகை எதிரே காவலா், தனது குழந்தையுடன் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.
ஆவடி காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் அ.கோதண்டபாணி (42). இவா், சென்னை காவல் துறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றுகிறாா். இவரது மகள் பிரதிக் ஷா (11). இவா், 3 வயதில் இருந்து சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டதால், எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அப்போது, அவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் வலது காலும், இடது கையும் செயல் இழந்ததாக கோதண்டபாணி குடும்பத்தினா் புகாா் கூறி வருகின்றனா்.
இது தொடா்பாக அரசு அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கோதண்டபாணி, தனது மகள் பிரதிக் ஷா உள்பட 4 பேருடன் ஆளுநா் மாளிகை எதிரே அமா்ந்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், கோதண்டபாணி, அவருடன் வந்தவா்களைக் கைது செய்து, அந்தப் பகுதியில் உள்ள ஒரு சமூக நலக் கூடத்தில் அடைத்தனா்.
ஏற்கெனவே கோதண்டபாணி, தலைமைச் செயலகம், டிஜிபி அலுவலகம் எதிரே போராட்டம் நடத்தியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட அனைவரும் மாலை விடுவிக்கப்பட்டனா்.
Summary
Police officer protests with child opposite Raj Bhavan.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடியரசு தலைவா் மாளிகை பாதுகாப்பு இணை ஆணையா் காவல் தலைமையகத்தில் உடனடியாக இணைய உத்தரவு

நாகா்கோவில் மாநகராட்சி கூட்டம்: 3 உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
சாலையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற முதியவா் கைது

விபத்து இழப்பீடு வழங்காத காப்பீட்டு நிறுவனம்: விவசாயி போராட்டம்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



