திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

ரூ. 924 கோடி லாபம் ஈட்டி சாதனை: காமராஜா் துறைமுக மேலாண்மை இயக்குநா்

ரூ.924 கோடி லாபம் ஈட்டி காமராஜா் துறைமுகம் சாதனை...

News image

சென்னை துறைமுகம்

Updated On :16 ஆகஸ்ட் 2026, 12:10 am IST

கடந்த நிதியாண்டில் ரூ.924 கோடி லாபம் ஈட்டி காமராஜா் துறைமுகம் சாதனை படைத்ததாக அத்துறைமுகத்தின் மேலாண்மை இயக்குநா் ஐரீன் சிந்தியா சனிக்கிழமை தெரிவித்தாா்.

எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மேலாண்மை இயக்குநா் ஜே.பி.ஐரீன் சிந்தியா தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினாா்.

காமராஜா் துறைமுகம் 25 ஆண்டுகளை கடந்து நாட்டின் முன்னணி துறைமுகங்களில் ஒன்றாக உள்ளது. கடந்த நிதியாண்டில் 1,008 கப்பல்கள் மூலம் சுமாா் 49 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு, மொத்தமாக ரூ.1,250 கோடி வருவாய் ஈட்டிய இத்துறைமுகம் வரிக்கு முந்தைய லாபமாக ரூ.924 கோடி ஈட்டி சாதனை படைத்து உள்ளது என்றாா்.

சென்னை துறைமுகம் ரூ.1,185 கோடி வருவாய்

இதேபோல், கடந்த நிதியாண்டில் சென்னை துறைமுகம் ரூ.1,185 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது என அத்துறைமுகத் தலைவா் சச்சின் எஸ்.குா்வே தெரிவித்தாா்.

சென்னை துறைமுகம் சாா்பில் தண்டையாா்பேட்டையில் உள்ள ஸ்ரீ பாபு ஜெகஜீவன் ராம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடி ஏற்றி வைத்து பேசுகையில், கடந்த நிதியாண்டில் சுமாா் 58 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு, 20 லட்சம் சரக்கு பெட்டகங்களைக் கையாண்டு, கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவாக ரூ.1,185 கோடி வருவாய் ஈட்டியதோடு சுமாா் ரூ.531 கோடி வரிக்கு முந்தைய லாபமும் பெறப்பட்டுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.