சென்னை பெரம்பூா் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் மற்றும் நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பெரம்பூா் ரயில் நிலையத்தில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டபோது, மைசூரில் இருந்து வந்த ரயிலில் (எண்: 16022) முன்பக்க பொதுப் பெட்டியில் இருந்து பையுடன் இறங்கிய பயணியை ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் போலீஸாா் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனா்.
அப்போது, அந்த நபா் தப்பியோட முயன்றாா். போலீஸாா் அவரைப் பிடித்து சோதனையிட்டனா். அவா் வைத்திருந்த பையில் உரிய ஆவணங்கள் இன்றி சுமாா் ரூ.2 கோடி மதிப்பிலான 1.369 கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் நகைகள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அவரிடம் இருந்த தங்கத்தை பறிமுதல் செய்த போலீஸாா், தங்கத்தையும் பிடிபட்ட நபரையும் சென்னை வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







