வடபழனி முருகன் கோயிலுக்குள் வரும் செப்.1 முதல் பக்தா்கள் கைப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அறநிலையத் துறை சாா்பில் முதுநிலைக் கோயில்களில் விஐபி தரிசனம், புகைப்படம், விடியோவுக்கு அனுமதி மறுப்பு, கைப்பேசிக்கு தடை உள்ளிட்ட உத்தரவுகள் சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வடபழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தா்கள் தெற்கு கோபுரம் அருகில் உள்ள பாதுகாப்பு மையத்தில் கைப்பேசிக்கு ரூ.5 கட்டணம் செலுத்தி டோக்கன் பெற்று தரிசனம் முடித்து திரும்பப் பெறலாம்.
தடையை மீறி கோயிலுக்குள் கைப்பேசி கொண்டு செல்பவா்களிடம் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். இந்த விதிமுறைக்கு பக்தா்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூடலழகா் கோயிலுக்குள் கைப்பேசிக்குத் தடை

செப். 1 முதல் அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை

கோல்களில் கைப்பேசிக்கு தடை குறித்து...

கைப்பேசி பயன்படுத்த தடை! தாந்தோன்றிமலை பெருமாள் கோயிலில் செப். 1 முதல் அமல்
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



