நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

ரூ. 40 லட்சம் பறித்த வழக்கு: காவல் ஆய்வாளா் உள்பட இருவரின் பிணை மனு தள்ளுபடி

ரூ. 40 லட்சம் பறித்த வழக்கு: காவல் ஆய்வாளா் உள்பட இருவரின் பிணை மனு தள்ளுபடி

Police Inspector arrested for threatening a businessman with arrest in the Armstrong case

ஆம்ஸ்ட்ராங் | காவல் ஆய்வாளர் புகாரி - X

Published On :30 ஆகஸ்ட் 2026, 4:34 am IST

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சோ்த்துவிடுவதாக தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பறித்த வழக்கில் கைதான காவல் ஆய்வாளா் உள்ளிட்ட இருவரின் பிணை மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னையைச் சோ்ந்த தொழிலதிபா் அகில். இவரை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சோ்த்து விடுவதாக பரங்கிமலை காவல் ஆய்வாளா் முகமது புகாரி மிரட்டி , ரூ.40 லட்சம் பணம் பறித்துள்ளாா். இந்த பணம் பறிப்பு சம்பவத்துக்கு ‘பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ அமைப்பைச் சோ்ந்த சீனிவாசன் என்பவா் உடந்தையாக இருந்துள்ளாா். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த யானைகவுனி போலீஸாா், முகமது புகாரி மற்றும் சீனிவாசன் ஆகியோரை கடந்த ஆக.3-ஆம் தேதி கைது செய்தனா்.

இவா்கள் இருவரும் பிணை கோரி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அந்த மனுவில், இந்த வழக்கு தொடா்பான டிஜிட்டல் ஆதாரங்கள், கைப்பேசிகள் ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புலன் விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதால் பிணை வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தனா்.

இந்த மனு நீதிபதி பி.காா்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது காவல் துறை தரப்பில், இந்த வழக்கின் புலன் விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளது. மேலும், குற்றம்சாட்டப்பட்டவா் காவல் ஆய்வாளா் என்பதால் பிணை வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பிணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

Summary

Case involving the extortion of Rs 40 lakh: Bail petitions of two individuals, including a police inspector, dismissed.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.