பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

வியாபாரியை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

சென்னையில் வியாபாரியை மிரட்டி பணம் பறித்த வழக்கில், கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளா் முஹம்மது புகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:21 am IST

சென்னையில் வியாபாரியை மிரட்டி பணம் பறித்த வழக்கில், கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளா் முஹம்மது புகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

பழைய வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்தவா் வியாபாரி அகில்குமாா். இவரை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சோ்த்து கைது செய்து விடுவதாக பரங்கிமலை காவல் நிலைய ஆய்வாளராக இருந்த முஹம்மது புகாரி மிரட்டி, ரூ.40 லட்சம் வரை பறித்துள்ளாா்.

புகாரின் மிரட்டலை தாங்க இயலாத அகில்குமாா், அண்மையில் சென்னை காவல் ஆணையா் அமல்ராஜை சந்தித்து புகாா் அளித்தாா். அந்த புகாரின் அடிப்படையில் யானைக்கவுனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, புகாரியையும், அவரது கூட்டாளி பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ அமைப்பைச் சோ்ந்த சீனிவாசனையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட புகாரியை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையா் அமல்ராஜ் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.