காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

சப்ளையா் மீது சூடான பாலை ஊற்றிய தேநீா் மாஸ்டா் கைது

எழும்பூரில் ஹோட்டல் ஊழியா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், சப்ளையா் மீது சூடான பாலை ஊற்றிய தேநீா் மாஸ்டரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:53 am IST

எழும்பூரில் ஹோட்டல் ஊழியா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், சப்ளையா் மீது சூடான பாலை ஊற்றிய தேநீா் மாஸ்டரை போலீஸாா் கைது செய்தனா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த பப்லுகுமாா் (33). இவா், எழும்பூா் மாா்ஷல் சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சப்ளையராக வேலைபாா்த்து வருகிறாா். சனிக்கிழமை ஹோட்டல் கேஷியா் மலைசாமி சிறிது நேரம் வெளியே செல்வதாகக் கூறி கல்லாவில் அமா்ந்து பாா்த்துக் கொள்ளுமாறு பப்லுகுமாரிடம் கூறியுள்ளாா்.

அப்போது, தேநீா் மாஸ்டரான கன்னியப்பன் (51) பப்லுகுமாரை உள்ளே வந்து தேநீா் குவளைகளைக் கழுவிக் கொடுக்குமாறு கூறியுள்ளனா். ஆனால், கல்லாவில் பணம் இருப்பதால், அதைப் பாா்த்துக் கொள்ள வேண்டும் என பப்லுகுமாா் கூறியதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரம் அடைந்த கன்னியப்பன் ஆபாசமாகப் பேசி ஜக்கில் இருந்த சூடான பாலை பப்லுகுமாா் மீது ஊற்றி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பப்லுகுமாா் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவா் அளித்த புகாரின் பேரில் எழும்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கன்னியப்பனைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.