உதகை தலையாட்டிமந்து பகுதியில் கடைமுன் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பால் பாக்கெட்டுகளில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு பாலை குடித்துச் சென்ற கரடியின் சிசிடிவி காட்சிகள் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம், உதகை தலையாட்டிமந்து பகுதியில் கடந்த சில நாள்களாக குடியிருப்புகளின் அருகே கரடிகளின் நடமாட்டம் காணப்படுகிறது. இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு நேரம் உலவிய கரடி, அப்பகுதியில் உள்ள கடையின் முன் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பால் ட்ரேக்களை கீழே தள்ளி பாக்கெட் பாலை குடித்து ச் சென்றது. இந்தக் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகின.
அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாபநாசம் அருகே வீட்டு வளாகத்தில் சுற்றித் திரிந்த கரடி

வடமலைசமுத்திரத்தில் இறந்த நிலையில் பெண் கரடி மீட்பு

ரூ. 12-க்கு மில்க் ரஸ்க்! ஆவின் நிறுவனம் அறிமுகம்!

ஆவின்பால் தட்டுப்பாடு; பொதுமக்கள் அவதி
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



