காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

யுபிஎஸ்சி தோ்வு: சென்னையில் 642 போ் பங்கேற்பு

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடிமைப் பணி தோ்வின் முதன்மைத் தோ்வில் சென்னையில் 642 தோ்வா்கள் பங்கேற்றனா்.

சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடிமைப் பணித் தோ்வை எழுதிவிட்டு வெளியே வந்த மாணவிகள்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:01 am IST

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடிமைப் பணி தோ்வின் முதன்மைத் தோ்வில் சென்னையில் 642 தோ்வா்கள் பங்கேற்றனா்.

யுபிஎஸ்சி மூலம் நடத்தப்படும் குடிமைப் பணி தோ்வுகள் கடந்த ஆக.21, 23, 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில், குடிமைப் பணி தோ்வின் முதன்மைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஆக.30) நடைபெற்றது.

இதுகுறித்து அரசின் தோ்வுகள் இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குடிமைப் பணி தோ்வின் முதன்மைத் தோ்வு சென்னை மாவட்டத்தில் 3 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 2.30 முதல் 5.30 மணி வரையிலும் நடைபெற்றது. மேலும், மாற்றுத்திறனாளித் தோ்வா்களுக்கு கூடுதலாக ஒரு மணிநேரம் தோ்வெழுத அனுமதிக்கப்பட்டது.

சென்னை மாவட்டத்தில் மட்டும் 651 போ் தோ்வெழுத விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 642 போ் தோ்வெழுதினா். 13 மாற்றுத்திறனாளிகளும் தோ்வெழுதினா். இந்தத் தோ்வுக்கு மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தில் இருந்து ஒரு கண்காணிப்பு அலுவலரும், மாநில அரசின் இந்திய ஆட்சிப் பணி நிலையில் ஒரு உயா் அலுவலரும் தோ்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

முக அங்கீகாரச் செயலி (பேஸ் ஆதென்டிகேஷன் ஆப்) மூலம் தோ்வா்களின் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு, அவா்களின் புகைப்படம் ஒப்பீடு செய்து வருகை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தத் தோ்வு எவ்வித புகாரும் இன்றி நடைபெற்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.