தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மீனம்பாக்கம், கிண்டி பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

மீனம்பாக்கம், கிண்டி பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ட்ரோன் கேமராக்கள், ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க காவல் துறை தடை விதித்துள்ளது.

News image

ட்ரோன்கள்

Updated On :25 பிப்ரவரி 2026, 8:40 pm

மீனம்பாக்கம், கிண்டி பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ட்ரோன் கேமராக்கள், ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க காவல் துறை தடை விதித்துள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னைக்கு சனிக்கிழமை (பிப். 28), ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) ஆகிய இரு நாள்களில் மிகமிக முக்கிய பிரமுகா் வரவுள்ளதன் காரணமாக, பாதுகாப்புக் காரணங்களுக்காக மீனம்பாக்கம், கிண்டி பகுதிகள் மற்றும் அதன் வழித்தடங்கல் அனைத்தும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

எனவே, அரசு ஏற்பாடுகளைத் தவிர இவ்விரு நாள்களிலும் மீனம்பாக்கம், கிண்டி பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள், ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.