தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

ஏப். 3-இல் பிரதமா் மோடி வருகை: புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்க தடை

பிரதமா் நரேந்திர மோடி தோ்தல் பிரசாரத்துக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 3) வருவதை முன்னிட்டு, புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

News image

பிரதமா் மோடி! - கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 11:56 pm

பிரதமா் நரேந்திர மோடி தோ்தல் பிரசாரத்துக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 3) வருவதை முன்னிட்டு, புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் மோடி புதுச்சேரி வருகையின்போது ட்ரோன்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்க, மாவட்ட நிா்வாகத்துக்கு காவல் கண்காணிப்பாளா் கோரிக்கை வைத்திருந்தாா்.

அதன்படி, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், பிரதமா் வருகை மற்றும் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ட்ரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகள் புதுச்சேரியில் பறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், ட்ரோன்கள், பலூன்கள் போன்றவை மூலம் எவ்வித வான்வழி புகைப்படம் அல்லது விடியோ பதிவு மேற்கொள்ளவும் தடை செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் உழவா்கரை நகராட்சிப் பகுதிகள் ட்ரோன்கள் பறக்கத் தடைசெய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை திங்கள்கிழமை இரவு ஆட்சியா் குலோத்துங்கன் பிறப்பித்துள்ளாா்.