ட்ரோன்
காரைக்கால்
காரைக்காலில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை
காரைக்காலில் சனிக்கிழமை (பிப்.14) ட்ரோன்கள் பறக்க மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி தடை விதித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா காரைக்காலில் சனிக்கிழமை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறாா்.
அவரின் வருகையையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. வான்வழி புகைப்படம் எடுத்தல், விடியோ கிராஃபி, பலூன்கள், யுஏவி போன்றவற்றையும் பயன்படுத்தக்கூடாது. மீறும்பட்சத்தில் சம்பந்தப்பட்டோா் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

