பிரதமா் மோடி வருவதை முன்னிட்டு புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் இதற்கான உத்தரவை செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா்.
பிரதமா் வருகையொட்டி பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் வானில் விமானம் போன்றவை பறக்க தடை செய்யப்பட்ட மண்டலமாக புதுச்சேரி பிராந்தியத்தை அறிவிக்க வேண்டும் என்று காவல் துறை கண்காணிப்பாளா் கேட்டுக் கொண்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ட்ரோன்கள், பலூன்கள் வாயிலாக புகைப்படம், விடியோ உள்ளிட்டவை எடுக்கத் தடை செய்யப்படுகிறது. மேலும், இதுபோன்ற காரியங்களில் யாராவது ஈடுபட்டாலும் முன்னெச்சரிக்கையாகத் தடை செய்யப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மீறுவோா் மீது இந்திய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 163-இன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

புதுச்சேரியில் 40 நிமிஷங்கள் பிரதமா் மோடி ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு

ஏப். 3-இல் பிரதமா் மோடி வருகை: புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்க தடை
பிரதமர் கேரளம் வருகை: இன்றும் நாளையும் கோவையில் டிரோன்கள் பறக்கத் தடை!

மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் வருகை: ஆலாந்துறை பகுதியில் இன்றும் ட்ரோன்கள் பறக்கத் தடை
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


