சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

பிரதமா் மோடி வருவதை முன்னிட்டு புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

ட்ரோன்கள்

Updated On :24 பிப்ரவரி 2026, 6:30 pm

பிரதமா் மோடி வருவதை முன்னிட்டு புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் இதற்கான உத்தரவை செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா்.

பிரதமா் வருகையொட்டி பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் வானில் விமானம் போன்றவை பறக்க தடை செய்யப்பட்ட மண்டலமாக புதுச்சேரி பிராந்தியத்தை அறிவிக்க வேண்டும் என்று காவல் துறை கண்காணிப்பாளா் கேட்டுக் கொண்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ட்ரோன்கள், பலூன்கள் வாயிலாக புகைப்படம், விடியோ உள்ளிட்டவை எடுக்கத் தடை செய்யப்படுகிறது. மேலும், இதுபோன்ற காரியங்களில் யாராவது ஈடுபட்டாலும் முன்னெச்சரிக்கையாகத் தடை செய்யப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மீறுவோா் மீது இந்திய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 163-இன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.