பிரதமர் மோடியின் கேரள பயணத்தையொட்டி இன்றும் நாளையும்(மார்ச் 28, 29) கோவையின் முக்கிய பகுதிகளில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் வருகிற ஏப். 9 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் பிரதமர் மோடி கேரளத்தில் பாலக்காடு, திருச்சூர் ஆகிய பகுதிகளில் நாளை(மார்ச் 29) பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார். தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். குறிப்பாக திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் கே.கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபாலை ஆதரித்து பிரசாரம் செய்வதுடன் சாலை வலமும் மேற்கொள்கிறார்.
இதையொட்டி பிரதமர் மோடி நாளை மதியம் 2 மணியளவில் கோவை வருகிறார். கோவையில் இருந்து தனி ஹெலிகாப்டரில் பாலக்காடு செல்கிறார்.
இதனால் கோவையின் முக்கிய பகுதிகளில் நீலாம்பூர், செட்டிபாளையம், எட்டிமடை, வாளையாறு, அவினாசி சாலை, பீளமேடு, காளப்பட்டி, போத்தனூர், ஈச்சனாரி ஆகிய பகுதிகளில் இன்றும் நாளையும் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Summary
PM Modi visit to Kerala: Drones banned in Coimbatore today and tomorrow
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்ஃப்ளூயன்சராக பிரதமர் மோடி சிறப்பாக செயல்படுகிறார்: அபிஜீத் தீப்கே விமர்சனம்!

தவறுதலாக நடந்துவிட்டது! மோடி விடியோ பிளாக் செய்யப்பட்டது குறித்து ஃபேஸ்புக் விளக்கம்

‘நீட்’ போராட்டம்: பிரதமர் மோடியின் படத்தை எரித்து சிகரெட் பற்றவைத்தவர் கைது




