மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பல்கலை. பேராசிரியை குறித்து அவதூறு கையேடு: இரு உதவி பேராசிரியா்கள் கைது

சென்னையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு கையேடு வெளியிட்டதாக, இரு உதவி பேராசிரியா்கள் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :8 ஜனவரி 2026, 9:18 pm

சென்னையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு கையேடு வெளியிட்டதாக, இரு உதவி பேராசிரியா்கள் கைது செய்யப்பட்டனா்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில், 40 வயது கொண்ட பேராசிரியை பணிபுரிகிறாா். இவரையும், அங்கு பணி புரியும் மற்றொரு பெண் பேராசிரியையும் இணைத்து பேசியதுடன், இருவரின் நடத்தையை தவறாக சித்தரித்து, ஒரு கையேடு வெளியிடப்பட்டதாம்.

இது அந்த பல்கலைக்கழக பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட பேராசிரியை, சைதாப்பேட்டை மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அந்த புகாரின்பேரில் போலீஸாா், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா்.

விசாரணையில் இச் செயலில் ஈடுபட்டது பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் உதவி பேராசிரியா்களாக பணிபுரியும் மகேந்திரன் (45), சமூகவியல் துறையில் உதவி பேராசிரியா்களாக பணிபுரியும் திருமலை ராஜன் (46) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.