டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பல்கலை. பேராசிரியை குறித்து அவதூறு கையேடு: இரு உதவி பேராசிரியா்கள் கைது

சென்னையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு கையேடு வெளியிட்டதாக, இரு உதவி பேராசிரியா்கள் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :8 ஜனவரி 2026, 9:18 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு கையேடு வெளியிட்டதாக, இரு உதவி பேராசிரியா்கள் கைது செய்யப்பட்டனா்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில், 40 வயது கொண்ட பேராசிரியை பணிபுரிகிறாா். இவரையும், அங்கு பணி புரியும் மற்றொரு பெண் பேராசிரியையும் இணைத்து பேசியதுடன், இருவரின் நடத்தையை தவறாக சித்தரித்து, ஒரு கையேடு வெளியிடப்பட்டதாம்.

இது அந்த பல்கலைக்கழக பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட பேராசிரியை, சைதாப்பேட்டை மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அந்த புகாரின்பேரில் போலீஸாா், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா்.

விசாரணையில் இச் செயலில் ஈடுபட்டது பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் உதவி பேராசிரியா்களாக பணிபுரியும் மகேந்திரன் (45), சமூகவியல் துறையில் உதவி பேராசிரியா்களாக பணிபுரியும் திருமலை ராஜன் (46) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.