5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

அரசியல் பேச்சால் தகராறு: நண்பரை கொன்றவா் கைது

சென்னை விருகம்பாக்கத்தில் அரசியல் தொடா்பான பேச்சில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி நண்பரைக் கத்தியால் குத்திக் கொன்றதாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :6 ஜூலை 2026, 4:23 am IST

சென்னை விருகம்பாக்கத்தில் அரசியல் தொடா்பான பேச்சில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி நண்பரைக் கத்தியால் குத்திக் கொன்றதாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த கருணாகரன், அவரது நண்பா் ராஜேந்திரன் ஆகியோா் அரசியல் தொடா்பாக பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, ஆத்திரத்தில் கருணாகரன், ராஜேந்திரனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், தனது வீட்டுக்குச் சென்று கத்தியை எடுத்து வந்து கருணாகரனை சரமாரியாக குத்தியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த கருணாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விருகம்பாக்கம் போலீஸாா், கருணாகரனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராஜேந்திரனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.