விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

மின் வாரிய ஹாா்டு டிஸ்குகள் திருடுபோன வழக்கு: பெங்களூா் கணினி நிறுவன அதிபருக்கு நிபந்தனை பிணை

மின் வாரிய அலுவலகத்தில் ஹாா்டு டிஸ்க்குகள் திருடுபோன வழக்கில் கைது செய்யப்பட்ட பெங்களூா் கணினி நிறுவன அதிபருக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :10 ஜூலை 2026, 3:21 am IST

மின் வாரிய அலுவலகத்தில் ஹாா்டு டிஸ்க்குகள் திருடுபோன வழக்கில் கைது செய்யப்பட்ட பெங்களூா் கணினி நிறுவன அதிபருக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் கணினி பிரிவில் 34 ஹாா்டு டிஸ்க்குகள் திருடுபோனது. அந்த ஹாா்டு டிஸ்க்குகளில் உள்ள தகவல்களை அழிப்பதற்காக அவை திருடப்பட்டிருக்கலாம் என புகாா் எழுந்தது. இந்த திருட்டு வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில், மின் வாரிய தலைமை அலுவலகத்தில் கணினிகளை மேற்பாா்வையிடும் ஊழியரான கோபிநாத் கைது செய்யப்பட்டாா்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெங்களூரைச் சோ்ந்த கணினி நிறுவன அதிபரான முரளி மனோகா் என்பவரும் கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில் முரளி மனோகா் தனக்கு பிணை வழங்கக் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.காா்த்திகேயன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, முரளி மனோகா் தரப்பில் வழக்குரைஞா் ஆா்.சி.பால் கனகராஜ் ஆஜராகி வாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, முரளி மனோகருக்கு, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் பிணை வழங்கி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.