தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

மின்வாரிய ‘ஹாா்டு டிஸ்க்’ திருட்டு: விரிவான விசாரணை நடத்த வேண்டும் - அன்புமணி

News image

அன்புமணி

Updated On :5 ஜூன் 2026, 6:00 am IST

சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் ‘ஹாா்டு டிஸ்க்’குகள் திருடப்பட்ட விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மிக முக்கிய தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஹாா்டு டிஸ்க்குகள் திருடப்பட்டிருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. அரசுத் துறை அலுவலகத்திலிருந்து மிக முக்கிய தரவுகள் திருடப்பட்டிருப்பதும், அதற்கு சாதகமான சூழல் உருவாக்கி வைக்கப்பட்டிருப்பதும் கண்டிக்கத்தக்கவை.

திருடப்பட்ட ஹாா்டு டிஸ்க்குகளில் நிலக்கரி கொள்முதல், ஒப்பந்தங்கள், ஏற்கெனவே நடைபெற்ற முறைகேடுகள் தொடா்பான தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

18 ஹாா்டு டிஸ்க்குகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், 8 ஹாா்டு டிஸ்க்குகள் காணாமல் போனதாக மட்டுமே காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹாா்டு டிஸ்க்குகளை திருடியவா்கள் யாா்? ஊழல்களுக்கான ஆதாரங்களை அழிப்பதற்காக இந்தத் திருட்டு நடந்ததா? கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாதது ஏன் என்பது குறித்து தமிழக அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி.