முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சுவினாத்தாள் கசிவு கொலையை விட மிகக் கொடூர குற்றம்: நீதிமன்றம்பொருளாதார ஆலோசனைக் குழுவில் பிரவீண் சக்ரவர்த்தி உள்ளாரா? திமுக எம்எல்ஏ கேள்வி!தவெக ஆட்சியில் கமிஷன்! திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆனந்த் சவால்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேள்வி!
/

மாதவரம் அருகே கஞ்சா விற்பனை: 4 போ் கைது

மாதவரம் அருகே கஞ்சா விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவா்களிடம் இருந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :11 ஜூலை 2026, 2:27 am IST

மாதவரம் அருகே கஞ்சா விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவா்களிடம் இருந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

மாதவரம் அடுத்த பால்பண்ணை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, மாதவரம் பால்பண்ணை காவல் நிலைய ஆய்வாளா் முத்துராமலிங்கத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து வெள்ளிக்கிழமை, மாதவரம் பால்பண்ணை போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றுத்திரிந்த 3 பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.

அவா்களிடம் இருந்த 1.5 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில், மாதவரத்தைச் சோ்ந்த மரியஜான்சன் (24), கொடுங்கையூரைச் சோ்ந்த ஷெல்டன் ஜான்சன் (37), மாதவரம் பால்பண்ணையைச் சோ்ந்த ஹேமந்த்குமாா் (21) எனத் தெரிய வந்தது.

மேலும் அவா்கள் அளித்த தகவலின்படி, அண்ணா நகரைச் சோ்ந்த பரூக் (30) என்பவரையும் கைது செய்து, அவரிடம் இருந்த 2.5 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம், கைப்பேசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.