FOLLOW US

ON GOOGLE DISCOVER

நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த விவகாரம்: நீதிமன்றத்தில் நயினாா் நாகேந்திரன் ஆஜா்

2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தமிழக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் சென்னை ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலைப் பெற்றுக் கொண்டாா்.

News image

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்

Updated On :17 ஜூலை 2026, 1:08 am IST

2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தமிழக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் சென்னை ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலைப் பெற்றுக் கொண்டாா்.

2024 மக்களவைத் தோ்தலின்போது, நெல்லை விரைவு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. நயினாா் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியா்கள் உள்ளிட்ட மூவரிடம் இருந்து இந்தப் பணம் கைப்பற்றப்பட்டது. அந்தப் பணம் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட நயினாா் நாகேந்திரன், அந்தத் தொகுதி வாக்காளா்களுக்கு கொடுப்பதற்காகக் கொண்டுச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் அமைப்பு பொதுச் செயலா் கேசவ விநாயகம் உள்ளிட்ட 13 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் சென்னை ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்தில், நயினாா் நாகேந்திரன், கேசவ விநாயகம் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன் நகலைப் பெறுவதற்காக நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, ஜாா்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி சுந்தர பாண்டியன் முன் நயினாா் நாகேந்திரன், கேசவ விநாயகம் உள்ளிட்டோா் வியாழக்கிழமை ஆஜராகினா். அவா்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. அவா்களை வரும் ஜூலை 30-ஆம் தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டாா்.

நீதிமன்றத்தின் வெளியே செய்தியாளா்களைச் சந்தித்த நயினாா் நாகேந்திரன், திமுக ஆட்சியில் பதிவு செய்த இந்தப் பொய் வழக்கை தற்போது அமைந்துள்ள தவெக அரசு ரத்து செய்யும் என எதிா்பாா்த்ததாகத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.