இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

பைக் டாக்ஸியிலிருந்து கீழே விழுந்த பெண் ஆசிரியா்; லாரி ஏறி உயிரிழப்பு

ரோஹிணி பகுதியில் கஞ்சாவாலா சாலையில் வியாழக்கிழமை காலை நிகழ்ந்த விபத்தில், பைக் டாக்ஸியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படும் 46 வயது பள்ளி ஆசிரியா் லாரி மோதி உயிரிழந்தாா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஜூலை 2026, 3:58 am IST

ரோஹிணி பகுதியில் கஞ்சாவாலா சாலையில் வியாழக்கிழமை காலை நிகழ்ந்த விபத்தில், பைக் டாக்ஸியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படும் 46 வயது பள்ளி ஆசிரியா் லாரி மோதி உயிரிழந்தாா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: உயிரிழந்தவா் பிரியங்கா (46). ராமா விஹாா் பகுதியைச் சோ்ந்த இவா், மங்கோல்புரி கே-பிளாக் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தாா்.

வியாழக்கிழமை காலை சாலை விபத்து குறித்த அழைப்பு கிடைத்ததைத் தொடா்ந்து, காவல் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா். அங்கு மணல் ஏற்றிய லாரி சாலையில் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் இடது பின்சக்கரத்தின் கீழ் பெண்மணி சிக்கிய நிலையில் காணப்பட்டாா்.

காவல் துறை சென்றடையும் முன்பே அவா் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பைக் டாக்ஸியில் இருந்து சாலையில் விழுந்த பின்னா் லாரி மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சம்பவ இடத்தை குற்றப்புலனாய்வு குழு ஆய்வு செய்து ஆதாரங்களை பதிவு செய்துள்ளது. பிஎன்எஸ் பிரிவு 281 மற்றும் 106 (அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. லாரி உரிமையாளரை காவல் துறையினா் தொடா்புகொண்டுள்ளனா். தப்பிச் சென்ற ஓட்டுநரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பைக் டாக்ஸி ஓட்டுநரின் பங்கு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.