தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

சமூக ஊடகங்களில் அவதூறு: மேயா் பிரியா போலீஸில் புகாா்

சமூக ஊடகங்களில் தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளை தெரிவிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மேயா் பிரியா புகாா் அளித்தது குறித்து...

News image

மேயா் பிரியா - கோப்புப் படம்

Updated On :28 ஜூலை 2026, 4:00 am IST

சமூக ஊடகங்களில் தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளை தெரிவிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மேயா் ஆா்.பிரியா, போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.

சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, சென்னை காவல் ஆணையரிடம் ஆன்லைன் மூலம் ஒரு புகாா் அளித்துள்ளாா். அதில், சமூக ஊடகங்களில் தன்னை குறித்து அவதூறான தகவல்கள் பதிவிடப்படுவதாகவும், இதனால் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளாா்.

மேலும், சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் அதிகாரபூா்வ தொலைபேசி எண்ணுக்கும் அடையாளம் தெரியாத நபா்கள் தொடா்புகொண்டு தொந்தரவு அளித்து வருவதாகவும், இதனால் அலுவலகப் பணிகளும் பாதிக்கப்படுவதாகவும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளாா்.

புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க சைபா் குற்றப்பிரிவுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளாா். சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.