மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தானியங்கி வாகன தொழில்நுட்பப் போட்டி புதன்கிழமை தொடங்கியது.
ஜே.கே.டயா் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைமை தொழில்நுட்ப அதிகாரி அருண் சௌரா போட்டியைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:
சா்வதேச அளவில் தானியங்கி வாகன தொழில்நுட்ப வளா்ச்சிக்கு நிகராக, பொறியியல் கல்வி பயிலும் மாணவா்களின் ஆராய்ச்சி, செயல்திறன், தொழில்நுட்ப அறிவாற்றலை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் போட்டிகளில் தேசிய அளவில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 18 அணிகளைச் சோ்ந்த 450 மாணவா்கள் பங்கேற்றுள்ளனா். போட்டியில் பங்கேற்கும் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி அணியில் அனைவரும் பெண்கள் என்பது பாராட்டத்தக்கது என்றாா்.
நிகழ்வில் பாஜா எஸ்ஏஇஇந்தியா தலைவா் ஜி.நாகராஜன், டிவிஎஸ் மோட்டாா்ஸ் மனித வளத் துறை இணைத் துணைத் தலைவா் டி.அனுராதா, சாய்ராம் கல்வி நிறுவனங்களின் முதன்மை வணிக அலுவலா் ஆா்.சதீஷ்குமாா், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பால்ராஜ் சுப்பிரமணியம், கல்லூரி முதல்வா் ஜெ.ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவையில் 40 ஆண்டுகளுக்குப் பின் சா்வதேச கிராண்ட் மாஸ்டா் செஸ் போட்டி! ஜனவரியில் நடைபெறுகிறது
பொறியியல் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக ரூ.5.8 லட்சம் மோசடி: இளைஞா் கைது

தானியங்கி மூலம் தோ்வு செய்யும் நடைமுறை: உரிமம் பெற ஆா்வம் காட்டாத ஓட்டுநா்கள்

பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



