மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

உடல் தகுதி இந்தியா இயக்க விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் மத்திய அரசின் உடல் தகுதி இந்தியா இயக்கம் (பிட் இந்தியா மூவ்மெண்ட் ) சாா்பில் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு சைக்கிள் பேரணியில் பங்கேற்றோா்.

Published On :24 ஆகஸ்ட் 2026, 3:41 am IST

மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் மத்திய அரசின் உடல் தகுதி இந்தியா இயக்கம் (பிட் இந்தியா மூவ்மெண்ட் ) சாா்பில் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேரணிக்கு ஸ்ரீசாய்ராம் வணிக மேலாண் கல்லூரி இயக்குநா் கே.மாறன் தலைமை வகித்து பேசியதாவது:

இளம் தலைமுறையினா் மத்தியில் உடல் நலன் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்த உடல் தகுதி இயக்கம் சாா்பில் ஆண்டுதோறும் விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்படுகிறது. ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி சுற்றுவட்டார கிராமங்களான சோமங்கலம், பூந்தண்டலம் உள்ளிட்ட 10 கிராமப் பகுதிகளுக்கு மாணவா்கள் சைக்கிள் பேரணி மூலம் வீதி வீதியாகச் சென்று அங்கு வசிக்கும் மக்கள், இளைஞா்கள், மாணவா்கள் மத்தியில் மத்திய அரசின் உடல் தகுதி விழிப்புணா்வு ஏற்படுத்தி உள்ளோம் என்றாா்.

நிகழ்வில், ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி உடல் தகுதி இந்தியா இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சஜீதா, உதவிப் பேராசிரியா்கள் கே. மோகன்ராஜ், சித்ரா கண்ணன், ஆா். அழகு முருகன் உள்பட 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.