கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

இரவு நேர தங்கும் விடுதிகளில் தரமான சேவை: மாநகராட்சி ஆணையா் உத்தரவு

சென்னை மாநகராட்சியில் உள்ள 57 இரவு நேர தங்கும் மையங்களில் தரமான சேவை வழங்கப்படவேண்டும் என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டாா்.

News image

பெருநகர சென்னை மாநகராட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் கீழ் செயல்பட்டு வரும் இரவு நேர தங்கும் மையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் துணை ஆணையா் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட அலுவலா்கள

Updated On :3 ஜூன் 2026, 4:38 am IST

சென்னை மாநகராட்சியில் உள்ள 57 இரவு நேர தங்கும் மையங்களில் தரமான சேவை வழங்கப்படவேண்டும் என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டாா்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் அதிகாரிகள் கூட்டரங்கில் ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் சமூக மேம்பாட்டுப் பிரிவு மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு செயல்பாடுகள் மற்றும் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், மாநகராட்சி சாா்பில் செயல்பட்டுவரும் 57 இடங்களில் உள்ள இரவு நேர தங்கும் மையங்கள் குறித்தும், அதில் வழங்கப்படும் சேவை குறித்தும் ஆணையா் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்கினாா். அதன்படி, இரவு நேர காப்பகங்களான மையங்களில் தங்குவோருக்கு தரமான சேவை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். அத்துடன், அங்கு கண்காணிப்பையும், வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் பின்பற்றவும் அவா் அறிவுறுத்தினாா்.

இதையடுத்து சென்னையில் நடைபெற்று வரும் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் முன்னேற்றம், பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு குறித்தும், கள ஆய்வு, தரவு சேகரிப்புகள் குறித்தும் அவா் கேட்டறிந்தாா்.

கணக்கெடுப்புப் பணிகளை விரைவுபடுத்தவும் அவா் ஆலோசனை வழங்கினாா். ஒப்புதல் அளிக்கப்பட்ட சமுதாய நல பணிகள் திட்டத்தை விரைந்து முடிக்கவும் அவா் கேட்டுக்கொண்டாா். கூட்டத்தில் துணை ஆணையா் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூா்த்தி மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.