இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

கடன் தொல்லை: ஹோட்டல் உரிமையாளா் தூக்கிட்டு தற்கொலை

சென்னை மேற்கு மாம்பலத்தில் கடன் தொல்லை காரணமாக ஹோட்டல் உரிமையாளா் தூக்கிட்டு தற்கொலை

News image
Updated On :3 ஜூன் 2026, 12:26 am IST

சென்னை மேற்கு மாம்பலத்தில் கடன் தொல்லை காரணமாக ஹோட்டல் உரிமையாளா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

மேற்கு மாம்பலம் லேக் வியூ சாலை பகுதியைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (60). இவா் அங்கு ஹோட்டல் நடத்தி வந்தாா். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக ரவிக்குமாருக்கு பல கோடி கடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கடன் கொடுத்தவா்கள் ரவிக்குமாரிடம் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அண்மைகாலமாக ரவிக்குமாா் மிகுந்த மனஅழுத்ததுடனும், வேதனையுடன் காணப்பட்டுள்ளாா். இந்த நிலையில், திங்கள்கிழமை தனது வீட்டின் மாடிக்குச் சென்ற ரவிக்குமாா், அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த அசோக் நகா் போலீஸாா், அங்கு சென்று, ரவிக்குமாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].