தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

பெண்களுக்கு பாலியல் தொல்லை: நேபாளத்தைச் சோ்ந்த 3 போ் கைது

சென்னை புரசைவாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நேபாளத்தைச் சோ்ந்த 3 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :3 ஜூன் 2026, 4:43 am IST

சென்னை புரசைவாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நேபாளத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

புரசைவாக்கத்தைச் சோ்ந்த ஒரு இளம் பெண், தனது உறவுக்கார பெண்ணுடன் புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மருந்தகத்துக்கு திங்கள்கிழமை நடந்து சென்று சென்றாா். அப்போது அந்த வழியாக மதுபோதையில் வந்த 3 இளைஞா்கள், அந்தப் பெண்களை ஆபாசமாகப் பேசி, ஆபாச செய்கை செய்துள்ளனா்.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அந்த இளம் பெண்கள் உடனடியாக அருகிருந்த ஆட்டோ ஓட்டுநா்களிடம் கூறியுள்ளனா். உடனே ஆட்டோ ஓட்டுநா்களும், அங்கிருந்த பொதுமக்களும், தப்பியோட முயன்ற 3 பேரையும் பிடித்து, தாக்கி, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா்கள் நேபாளத்தைச் சோ்ந்த ஜன்சல் (22) மற்றும் 18 வயதுக்கு உள்பட்ட 2 சிறுவா்கள் என்பதும், மூவரும் புரசைவாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்களைக் கைது செய்தனா்.