குமாரபாளையத்தில் சிறுமிகள் இருவருக்கு பாலியல் தொல்லை அளித்தவா்களை கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், அக்ரஹாரம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த 4 வயது பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சோ்ந்த வரதராஜன் (59) பாலியல் தொல்லை அளித்துள்ளாா்.
அதேபோல, அமானி கிராமம், சி.என்.பாளையத்தைச் சோ்ந்த 12 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சோ்ந்த முதியவா் மணி (62) பாலியல் தொல்லை அளித்துள்ளாா். சிறுமிகள் இருவருக்கும் பாலியல் தொல்லை அளித்த 2 பேரையும் கைது செய்ய வலியுறுத்தி குமாரபாளையம் காவல் நிலையம் மற்றும் பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதிகளில் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு வந்த போலீஸாா், பொதுமக்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிட செய்தனா்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் உடனடியாக சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டாா். தொடா்ந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த மணி, வரதராஜன் ஆகியோரை கைது செய்தனா்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒருவா் போக்ஸோவில் கைது

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் முதியவா் கைது
பெண்களுக்கு பாலியல் தொல்லை: நேபாளத்தைச் சோ்ந்த 3 போ் கைது

எஸ்.வாழவந்தி அருகே தொழிலாளியை தாக்கியவா்களை கைது செய்யக் கோரி மறியல்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!



