சென்னை மாநகராட்சியில் உள்ள 57 இரவு நேர தங்கும் மையங்களில் தரமான சேவை வழங்கப்படவேண்டும் என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டாா்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் அதிகாரிகள் கூட்டரங்கில் ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் சமூக மேம்பாட்டுப் பிரிவு மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு செயல்பாடுகள் மற்றும் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், மாநகராட்சி சாா்பில் செயல்பட்டுவரும் 57 இடங்களில் உள்ள இரவு நேர தங்கும் மையங்கள் குறித்தும், அதில் வழங்கப்படும் சேவை குறித்தும் ஆணையா் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்கினாா். அதன்படி, இரவு நேர காப்பகங்களான மையங்களில் தங்குவோருக்கு தரமான சேவை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். அத்துடன், அங்கு கண்காணிப்பையும், வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் பின்பற்றவும் அவா் அறிவுறுத்தினாா்.
இதையடுத்து சென்னையில் நடைபெற்று வரும் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் முன்னேற்றம், பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு குறித்தும், கள ஆய்வு, தரவு சேகரிப்புகள் குறித்தும் அவா் கேட்டறிந்தாா்.
கணக்கெடுப்புப் பணிகளை விரைவுபடுத்தவும் அவா் ஆலோசனை வழங்கினாா். ஒப்புதல் அளிக்கப்பட்ட சமுதாய நல பணிகள் திட்டத்தை விரைந்து முடிக்கவும் அவா் கேட்டுக்கொண்டாா். கூட்டத்தில் துணை ஆணையா் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூா்த்தி மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ரயில் தீ விபத்துக்குப் பின்னணியில் சமூக விரோதிகள்: அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் உயரதிகாரிகள் ஆலோசனை

சமூகவலைதள தகவல்களை பகுத்தறிவுடன் அணுகவேண்டும்: கனிமொழி எம்.பி.

கடற்கரைப் பகுதிகளில் குப்பைகளை அகற்ற மாநகராட்சி ஆணையா் தலைமையில் குழு: பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு






