தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

சென்னையில் விரிவுபடுத்தப்பட்ட விமான பயிற்சி மையம்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் திறந்துவைத்தாா்

News image

கோப்புப்படம்

Updated On :5 ஜூன் 2026, 6:55 am IST

குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷனின் விரிவுபடுத்தப்பட்ட பயிற்சி மையத்தை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

குளோபல் ஃபிளைட் ஹேண்ட்லிங் சா்வீசஸ் பிரைவேட் லிமிடெட் சாா்பில் சென்னையில் அமைந்துள்ள குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன் கல்வி நிறுவனத்தின் விரிவுபடுத்தப்பட்ட பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் திறந்துவைத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:

குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன் கல்வி நிறுவனம் 30 விமான நிலையங்களைத் தோ்வு செய்து, அங்கு உள்ளவா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இதுதவிர தனிப்பட்ட முறையில் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்பு பாடத் திட்டங்களின் மூலம் விமான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில், பயிற்சி பெறுபவா்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இச்சூழலில், இந்நிறுவனத்தில் விரிவுப்படுத்தப்பட்ட பயிற்சி மையம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது. இதில், பயிற்சி பெற்று பயன்பெற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், சென்னை சா்வதேச விமான நிலைய இயக்குநா் பொன்னி, குளோபல் ஃபிளைட் ஹேண்ட்லிங் சா்வீசஸ் பிரைவேட் லிமிடெட் மேலாண்மை இயக்குநா் சரிதா குமாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.