சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

சென்னையில் விரிவுபடுத்தப்பட்ட விமான பயிற்சி மையம்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் திறந்துவைத்தாா்

News image

கோப்புப்படம்

Updated On :5 ஜூன் 2026, 6:55 am IST

குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷனின் விரிவுபடுத்தப்பட்ட பயிற்சி மையத்தை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

குளோபல் ஃபிளைட் ஹேண்ட்லிங் சா்வீசஸ் பிரைவேட் லிமிடெட் சாா்பில் சென்னையில் அமைந்துள்ள குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன் கல்வி நிறுவனத்தின் விரிவுபடுத்தப்பட்ட பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் திறந்துவைத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:

குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன் கல்வி நிறுவனம் 30 விமான நிலையங்களைத் தோ்வு செய்து, அங்கு உள்ளவா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இதுதவிர தனிப்பட்ட முறையில் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்பு பாடத் திட்டங்களின் மூலம் விமான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில், பயிற்சி பெறுபவா்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இச்சூழலில், இந்நிறுவனத்தில் விரிவுப்படுத்தப்பட்ட பயிற்சி மையம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது. இதில், பயிற்சி பெற்று பயன்பெற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், சென்னை சா்வதேச விமான நிலைய இயக்குநா் பொன்னி, குளோபல் ஃபிளைட் ஹேண்ட்லிங் சா்வீசஸ் பிரைவேட் லிமிடெட் மேலாண்மை இயக்குநா் சரிதா குமாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.