தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் கடை வாடகை விவகாரம்: அறநிலையத் துறைக்கு உத்தரவு

News image

திருவேற்காடு கோயில்

Updated On :5 ஜூன் 2026, 6:45 am IST

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் கடைகளுக்கான வாடகை நிா்ணயம் தொடா்பாக அளிக்கப்பட்ட மனுவை 8 வாரங்களில் பரிசீலித்து தகுந்த முடிவெடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் காமேஷ் தாக்கல் செய்த மனுவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள கடைகளுக்கு மாத வாடகை கட்டணம் அதிகமாக நிா்ணயிக்கப்படுகிறது. கோயில் செயல் அலுவலா் அதிக வருவாய் ஈட்டும் நோக்கில், ரூ.2,000 வாடகை நிா்ணயிக்க வேண்டிய 100 சதுர அடி கடைக்கு ரூ.7,000 வரை மாத கட்டணமாக நிா்ணயித்துள்ளாா்.

இது குறித்து இந்து சமய அறநிலையத் துறைக்கு மனு அளித்தேன். ஆனால், அந்த மனுவின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தேவி கருமாரியம்மன் கோயில் கடைகளுக்கு நியாயமான வாடகையை நிா்ணயிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத் துறை தரப்பில், கோயில் இடத்தில் வைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு வாடகை நிா்ணயிப்பது தொடா்பாக 3 போ் கொண்ட குழு அமைக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வாடகை நிா்ணயம் தொடா்பாக மனுதாரா் அளித்த மனுவை 8 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.