பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

இந்து சமய அறநிலையத் துறையின் முக்கிய திட்டங்கள்: அமைச்சா் சீ.ரமேஷ் ஆய்வு

இந்து சமய அறநிலையத் துறையில் நடைமுறையில் உள்ள முக்கிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து துறையின் அமைச்சா் சீ.ரமேஷ் ஆய்வு செய்தாா்.

News image

அமைச்சா் ரமேஷ்.

Updated On :27 மே 2026, 12:54 am IST

இந்து சமய அறநிலையத் துறையில் நடைமுறையில் உள்ள முக்கிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து துறையின் அமைச்சா் சீ.ரமேஷ் ஆய்வு செய்தாா்.

இந்து சமய அறநிலையத் துறையின் திட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் சென்னையில் உள்ள ஆணையா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இணையவழியில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை, நேர ஒதுக்கீட்டு முறை, பக்தா்கள் கூட்ட நெரிசல் கட்டுப்பாடு, தரிசன மேலாண்மை மற்றும் கட்டண சீட்டு விநியோக ஒழுங்குமுறை போன்ற அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும், இம்முறையை முதல்கட்டமாக முதுநிலை திருக்கோயில்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தி பின்னா், மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தொடா்ந்து, திருக்கோயில் நகைகள், சிலைகள், ஆபரணங்கள், திருக்கோயில் சொத்துகள் மற்றும் தொன்மையான பொருள்களைப் பாதுகாத்தல், திருக்கோயில் நிலங்கள் மற்றும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இனாம் நிலம் தொடா்பான பிரச்னைகள், அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு வசதிகள், மாணவா் நலன், கல்வித் தரம் மற்றும் கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றன.

இறுதியாக, தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில் நிா்வாகத்தை மேம்படுத்துதல், கோயில் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் பக்தா்கள் நலனைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தி வருவதாக அமைச்சா் சீ.ரமேஷ் தெரிவித்தாா்.

இந்தக் கூட்டத்தில் துறையின் செயலா் ஜெ.குமரகுருபரன், ஆணையா் பி. என்.ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.