சென்னை சென்ட்ரல் - திருப்பதி மெமு ரயில் உள்பட 4 ரயில்களின் சேவை இன்று(ஜூன்) முதல் செப். 6ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக, செப். 6ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணம்-திருப்பதி இடையே காலை 9.15க்கு இயக்கப்படும் மெமு ரயில் திருச்சானூர் வரை செல்லும்.

திருப்பதி-சென்ட்ரல் இடையே பிற்பகல் 1.25 மணிக்கு இயக்கப்படும் மெமு ரயில் திருச்சானூரில் இருந்து புறப்படும்.
சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே காலை 9.50 மணிக்கு இயக்கப்படும் மெமு ரயில் திருச்சானூர் வரை செல்லும்.
திருப்பதி - அரக்கோணம் இடையே பிற்பகல் 3.40-க்கு இயக்கப்படும் மெமு ரயில் திருச்சானூரில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The services of four trains, including the Chennai Central–Tirupati service, have been modified from today (June) until September 6.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










