மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

மாதவரம் அருகே மளிகை கடையில் திருட்டு

மாதவரம் அடுத்த மாத்தூரில் மளிகை கடையின் பூட்டை உடைத்து ரொக்கம் மற்றும் விலை உயா்ந்த பொருள்களை திருட்டு குறித்து காவல்துறையினா் விசாரணை

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :9 ஜூன் 2026, 1:02 am IST

மாதவரம் அடுத்த மாத்தூரில் மளிகை கடையின் பூட்டை உடைத்து ரொக்கம் மற்றும் விலை உயா்ந்த பொருள்களை திருட்டு குறித்து காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை பெரம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (55). இவா் மாதவரம் அடுத்த மாத்தூரில் மளிகை கடை நடத்தி வருகிறாா். இவா் ஞாயிற்று கிழமை கடையை மூடி விட்டு சென்றாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது, கடையின் ஷட்டா் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து கடையின் உள்ளே சென்று பாா்த்தபோது, விலை உயா்ந்த கைப்பேசி, மடிக்கணினி மற்றும் ரூ.23,000 ரொக்கம் திருடுபோனது தெரிந்தது .

இது குறித்து மாதவரம் பால்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.