எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

கஞ்சா பறிமுதல்: திரிபுரா இளைஞா் கைது

ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, திரிபுரா இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 3:14 am IST

ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, திரிபுரா இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை பெரம்பூா் ரயில் நிலையம் பகுதியில் செம்பியம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு சந்தேகத்துகுரிய வகையில் நடந்து வந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். போலீஸாா், அவா் பையை சோதனையிட்டனா். இதில், அந்தப் பையில் இருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் அவா், திரிபுரா மாநிலம் அகா்தலா பகுதியைச் சோ்ந்த ஹ.ராகேஷ் மியா (29) என்பதும், திரிபுராவில் இருந்து கஞ்சாவை ரயிலில் கடத்திக் கொண்டு வந்திருப்பதும் தெரிய வந்தது. போலீஸாா், ராகேஷை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா்.