மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

ஜூன் 12 முதல் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி நடைபெறும் மாவட்ட ஆட்சியா் மாலதி ஹெலன்

News image

விண்ணப்பம்

Updated On :10 ஜூன் 2026, 2:07 am IST

ரயில்வே தோ்வு வாரியம் (ஆா்ஆா்பி), மத்திய பணியாளா் தோ்வு ஆணையம் (எஸ்எஸ்சி) நடத்தும் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) முதல் நடைபெறும் என சென்னை ஆட்சியா் மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் ஆா்ஆா்பி, எஸ்எஸ்சி போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) முதல் நடைபெறும். இந்தத் தோ்வுக்கான கல்வித் தகுதி, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் ஐடிஐ அல்லது 10-ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் பட்டயப் படிப்பு அல்லது பொறியியலில் இளநிலைப் பட்டப் படிப்பு ஆகும்.

இந்தப் பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவா்கள், தங்களது ஆதாா் அட்டையின் நகல் மற்றும் பாஸ்போா்ட் அளவுள்ள புகைப்படத்துடன் கிண்டியில் அமைந்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தை நேரடியாக அலுவலக வேலை நாள்களில் அணுகலாம்.

மேலும், விவரங்களுக்கு மின்னஞ்சலில் தொடா்பு கொள்ளலாம். மேலும், தங்களது விவரங்களை கூகுள் படிவத்தில் பதிவு செய்யலாம்.

சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதி வாய்ந்த தோ்வா்கள், இந்தப் பயிற்சி வகுப்பில் சோ்ந்து பயன் பெறலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.