தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் மத்திய அரசு காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுகளுக்கு ஜூன் 19-ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தெரிவித்திருப்பது:
மத்திய அரசின் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பட்டதாரிகள் நிலையில் (எஸ்எஸ்சி - சிஜிஎல்) உள்ள 12 ஆயிரத்து 256 பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 22 ஆம் தேதி. இதற்கான இணையதள முகவரி ட்ற்ற்ல்ள்://ள்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்
இதேபோல, ரயில்வே தோ்வாணையத்தின் சாா்பில் காலியாக உள்ள 11 ஆயிரத்து 127 லோகோ உதவி ஓட்டுநா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஜூன் 16 ஆம் தேதி. இதற்கான இணையதள முகவரி ட்ற்ற்ல்ள்://ழ்ழ்க்ஷஸ்ரீட்ங்ய்ய்ஹண்.ஞ்ா்ஸ்.ண்ய்
இத்தோ்வுகளுக்கு தயாராகி வரும் போட்டித் தோ்வா்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள் 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள், ஆதாா் அட்டை நகலுடன் தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகலாம். மேலும், விவரங்களுக்கு 04362 - 237037 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.










